Friday 26 August 2011

ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் - பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து:

’ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்றுதானே கூறியிருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பல தெய்வங்கள் இருப்பானேன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது யார் சொன்ன வார்த்தை? அது அநேக மக்களுக்கு தெரியாது. சரியாகப் புரியாதவர்கள், நாஸ்திகர் பேசினார் என்று சொல்வார்கள். இந்த வாக்கு திருமூலர் வேதவாக்கு. அவர் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதை முழுவதும் கூறாமல்,’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு விடுகிறார்கள் நாஸ்திக கும்பல்.

அப்படியானால் ஒரு வக்கீல் ஒரு 'statement'ன் ஒரு பகுதியை மாத்திரம் வாசித்துக் காட்டிவிட்டு, இன்னொரு பகுதி வேண்டாம் என்று கூறினால், அடி முட்டாளாக இருந்தால்தான் அதை கேட்பான். இல்லாவிட்டால் எடுத்துக் கொண்ட பகுதியைப் பூராவும் படி என்று சொல்லுவான். அதுதான் முறை.

பல தெய்வ உருவங்களை வைத்து வணங்குகிற மக்களுக்கு, ஒரு தெய்வம் தான் உண்டு என்று சொல்வதற்கு என்ன காரணம்? என்று சாதாரண மக்களுக்கு தெரியாது.

ஒருவர் வீட்டுக்கு போகிறோம். அந்த வீட்டில் பல படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீட்டுக்காரர் வந்து, இதுதான் என்னுடைய தகப்பனார் படம் என்று ஒரு படத்தைக் காட்டுகிறார். அதற்கு பின்னால் ஒரு பெண்ணோடு இருப்பவர் படத்தைக் காட்டி, இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஆணும், பெண்ணும், ஒரு குழந்தையுடன் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னர் விருத்தாப்பியப் பருவத்தில் ஒருவரும், கல்யாண கோலத்தில் இருக்கிற ஒரு ஆணும், பெண்ணும் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு வருகிறவர் உனக்கு எத்தனை தகப்பனார் என்று கேட்கலாமா? (கைதட்டல்). அப்படிக் கேட்பவன் அறிவுடையவன் ஆவானா?

முதல் படம் இவன் தகப்பனார் வாலிபனாக இருந்தபோது எடுத்த படம். அடுத்த படம், இவனுடைய தாயை, தகப்பனார் கல்யாணம் செய்து கொண்ட போது எடுத்த படம்.

அடுத்தது, இவன் குழந்தையாகப் பிறந்த போது எடுத்த படம்.

அடுத்து இவனை மண அறையில் மனைவியோடு தகப்பனார் ஆசீர்வாதம் செய்கிற படம்.

அடுத்தது இவன் பெற்ற குழந்தையைத் தகப்பனார் கொஞ்சுகிற படம். ஒரே தகப்பனார் பல காலத்தில் பல உருவில் இருக்கிறார்.

அதே போல் பரம்பொருள் ஒரே பிரம்மம், உல்கத்திலே துஷ்ட நிக்ரக பரிபாலனம் செய்ய பல ரூபத்தோடு பல காட்சிகளை எடுக்கிறார். இதை ஞாபகார்த்தம் செய்ய வேண்டுமென்பதற்காக, அந்தத்தத் திருக்கோலங்களாக - உருவங்களாக வைத்திருக்கிறார்கள். அத்தனை தெய்வம் இருக்கிறது என்று சொல்லவில்லை. இதுதான் ரகசியம். இதைச் சாதாரண அறிவற்ற நிலையில் “இத்தனை தெய்வங்களா ?” என்று கேட்பது நாலாம்தரக் கேள்வி…”

மூலம்: பசும்பொன் களஞ்சியம்


Friday 19 August 2011

Pasumpon Muthuramalingam Thevar’s speech

Pasumpon Muthuramalingam Thevar’s speech:

“There is a group contesting the elections with the call, ‘Tamil love is important; Tamil Nadu must live’. It is essential to have love for Tamil. But, see how these fellows display their love? In their meetings, they keep telling, ‘North Indians, South Indians; North land, South land” and attempt to divide us. They say, the next meeting is at ‘Jinnah Park’. The one after that is at ‘Robinson Park’. They have no problem using these names.

At the same time, if it is going to be in ‘Tilak Ghat’, they get angry to use his name. They say, ‘North Indian ---- Father ground’.

(Sarcastically, Thevar, switches to English):

In what way Jinnah is not a North Indian? How is the names Jinnah and Robinson so sweet to you Sir? How is the name of poor Tilak so bitter to you Sir? I am not able to understand.

This exposes that you came from ‘Justice Party’ whose primary job was bootlicking the Whites. Further, these fellows say that, ‘North Indian, swindles Dravidian land. North Indian name must not be here. If present, we will agitate to change it’. Very happy.

You agitated to change the name ‘Dalmiapuram’. But, you did nothing to change ‘Harvypatti’. Why not? White’s name can be there. That will make you happy. But, you will want the name ‘Dalmiapuram’ to go. Will any fellow with sense agree?

In Harvey mill, பட்டிவீரன்பட்டி Soundara Pandiyan’s family has stocks. He is a founding father of DMK. So, your party won’t get money, if you ask for the name to be changed. So, it will be pointless to hide the truth from the Tamils, by harping about the language. Understand this. This is the secret.

In addition, they keep shouting ‘Dravida nadu’. How dare you ask for this? If you had fought for freedom from the British, by fighting along with the people when the Britishers were keeping us as slaves, we may say, you qualify to ask for this.

n addition, they keep shouting ‘Dravida nadu’. How dare you ask for this? If you had fought for freedom from the British, by fighting along with the people when the Britishers were keeping us as slaves, we may say, you qualify to ask for this.

How can you demand ‘Dravida nadu’ today when we were fighting for independence, you took money from the British and conducted ‘war propaganda’ in their favor? Like the ‘secret agreement’ that resulted in the formation of Pakistan, you may also be the ‘fifth columnist’ for the Whites. We are not mad to be cheated like that.

‘We want Tamil. No to Hindi’, is what they say. In the 1937 anti-Hindi agitation, I told Rajagopalachariyar’s ministry, not to impose Hindi. This is history. ‘If our party comes to power, we will have the name ‘Tamil State’. We are not against removing the name ‘Residuary Madras State’. But, by misusing the Tamil language name and posing as preserver of Tamil people’s rights, if you are going to bring in ‘agitation to spoil Tamil Culture’ and ‘atheism in the name of creating a rift between, Brahmins and non-Brahmins’, we won’t allow.

How do you protect non-Brahmins, by writing stories like ‘Romapuri Rani’? By writing such stories, how many school boys have you spoiled? In addition to ‘Romapuri Rani’, you have also written ‘Thangaiyin Kadhal’,in which you have written that, ‘a brother falls in love with his sister’. Next, why can’t the son marry the mother? What else? Is this, Tamil culture?

My request to all of you is not to support these parties which will ruin the lives of school going children thereby take our country in the path of destruction.

குள்ளநரிக் கூட்டம் ரத்தம் குடிக்க ...

வரலாற்றில் அடிக்கடி ஏற்படும் சலசலப்பு தான் நம்மவர்கள் இங்கே சொன்ன குற்றசாட்டுகள் எல்லாம்.

முதன் முதலில் ஆங்கிலேயர் காலத்தில் தான் சாதிச்சங்கங்கள் திறம் பட ஆரம்பிக்கப் பட்டு பிரித்தாளும் கொள்கை மூலம் குள்ளநரிக் கூட்டம் ரத்தம் குடிக்க ஆரம்பித்தது. மண்ணின் மைந்தர்களாக, பூலித்தேவன் படையில் ஒண்டி வீரனாக, வென்னிக்காலாடியாக, கட்டபொம்மனின் படையில் வெள்ளையத்தேவனாக, சுந்தரலிங்கமாக பொதுஎதிரியை சாதி பாரமால் எதிர்த்த இந்த மண்ணின் கூட்டம் இன்று சில படித்த முட்டாள்களால் மறுபடியும் துண்டாடப்படுகிறது.

பசும்பொன் ஐயா திரு. உ.முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஒரு தேசிய தலைவர். ஆன்மீகத்தையும் அரசியலையும் திறம்பட கையாண்டு இரண்டிலும் வெற்றி பெற்ற மாமனிதர். அவ்வையார் சொன்னது போன்ற குற்றம் குறை இல்லா சீர்தமிழர். அரசியல், ஆன்மீகம், தமிழர் பண்பாடு, விஞ்ஞானம், செழிப்பிலும் எளிமை, வீரத்திலும் அடக்கம், எவனுக்கும் அஞ்சாத சிங்கநிகர் குணம், எளியவர்களை மதிக்கும் மனிதத் தன்மை என பல்வேறு குணாதிசயங்களோடு விளங்கிய தீரம் மிக்க தமிழ் மைந்தர் நமது தேவர் திருமகனார்.

http://www.youtube.com/watch?v=PW1AWRfdPew

எத்தனையோ கோடி தமிழர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும், எல்லோருக்கும் இல்லாத சிறப்பாக முருகன் போல், கருப்பு போல், அய்யனார் போல், ஐயப்பன் போல் உணர்ச்சியோடு, உள்ளார்ந்த ஆன்மீக பலத்தோடு ஒரு அரசியல்வாதிக்கு இவ்வளவு லட்சம் பேர்களால் அஞ்சலி செலுத்தப்படுவது இன்று தேவர் திருமகனாருக்கு மட்டுமே.

ஒரு அருமை தமிழ் மைந்தனை சிறுமை புத்தியோடு குற்றம் சாட்டும் சிறு மதியாளர்கள் கூட்டம் தானாய் அழியும். நல்லவை பேசி நல்லவை வளர்த்து சமுதாயத்திற்கு நல்லது செய்வோர் பணி என்றும் சிறக்கும். அவர் தம் பெருமை எவர் எதிர்த்தாலும் மென்மேலும் கூடும்.

இன்றும் பொருளாதரத்தில் நலிந்த அய்யரும் உண்டு, அய்யங்காரும் உண்டு, ஏன் எல்லா சாதியிலும் தினக்கூலிகள் உண்டு. ஒட்டு மொத்த சமுதாய நலனை முன்னெடுக்காமல், ஆராய்ச்சி அறிவு குன்றிய படிப்பு கொண்ட, சுயநலம் பெருகிய கலி காலத்தில், உழைப்பு குறைந்து, கண்டுபிடிப்புகள் குன்றி, படித்த கூட்டம் மொத்தமும் அடிமையாய் மாறிப் போன ஒரு பேதையர் தமிழ் சமுதாயமான் இன்றைய சமூகத்தில் இது போல் சில கோடாரிக்காம்புகள் இருந்து கொண்டு தான் இருப்பார். பொய்யும் புனைசுருட்டுமாய் இருப்பார். அவரெல்லாம் தானாகவோ அல்லது அடிபட்டோ திருந்துவர்.

முருக பக்தராய், தன்னை முதன்முதலில் விவேகானந்தர் சொற்பொழிவிற்கு அழைத்த செட்டியாரை (தனது சமுதாயம் அதிகம் இருக்கும் தொகுதியில்) நிறுத்தி வெற்றி பெறச்செய்த, குமாரசாமி ராசாவுக்கு தலைமையின் வேண்டுகோளுக்காக பதவியை துச்சமாக எண்ணி விட்டுக் கொடுத்த, திருப்பரங்குன்றத்தில் ராஜாஜியை காந்தியின் ஆதரவுக் கடிதம் கொடுத்தும், இந்திய தேசிய படையையும் நேதாஜியையும் தரக்குறைவாக பேசியவர் என்ற காரணத்தால், குலக்கல்வியை முன்மொழிந்தவர் என்ற குறைபாட்டால், அவருக்கெதிராக காமராஜரை (எவ்வித படை பலமோ, பண பலமோ, ஆட்பலமோ இல்லாதவரை) நிப்பாட்டி அவரை தலைவராக ஆக்கியவர் நமது தேவர் திருமகனார். திரு வல்லத்தரசு அவர்கள் தேவர் திருமகனிடம் "ஒன்று நீங்கள் நில்லுங்கள், அல்லது நமது சமூகத்தில் ஒருவரை தலைவராக நிப்பாட்டுங்கள், ஏன் காமராஜரை நிப்பாட்டவேண்டும்?" என்று கேட்கும் போது "இது கொள்கை சண்டை, சாதிக்கு இடமேது" என்று சொல்லி காமராஜை தலைவராக ஆக்கி அழகுபார்த்தவர் நமது தேவர் திருமகனார் அவர்கள்.
http://picasaweb.google.com/sholagapandian/DQPbJK#slideshow/5551406829025647490

பாரத நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டு, தமிழகத்தில் மட்டும் ஒரு கட்சி (பார்வர்ட் பிளாக்) தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறதே, நேருவின் காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் (எதிர்க்கட்சி) இணைப்புக்கு எதிராக ஒருவர் இருக்கிறாரே, தொடர்ந்து காங்கிரசின் கள்ள நோட்டு புழக்கத்தை, கள்ள-மார்க்கெட் வணிகத்தை, தேர்தல் பணப்பட்டுவாடாவை, உலக அரசியலில் இந்தியாவின் தடுமாற்ற கொள்கைகளை ஒருவர் எவ்வித தங்கு தடையும் இல்லாமல் வீரியமாக மக்களுக்கு புரியுமாறு பேசி, ஆளும் கட்சிக்கு ஆட்டத்தை கொடுக்கிறாரே என்று திட்டம் போட்டு "முதுகுளத்தூரில்" மட்டும் கலவரத்தை ஏற்படுத்தி, ஆயுதம் கொடுத்து, மறவர்களை, சேர்வாரை, அவர்களுக்கு துணையாயிருந்த ஒரு பள்ளரை சுட்டுக் கொன்ற கொடுமை நடந்தேறியது தமிழ் மண்ணில். மக்கள் கட்சி மக்களை சுட்டுக் கொன்ற ஒரு கொடுமை நடந்தது நம் சேது பூமியில்.

பச்சை தமிழரும் கடைசி களத்தில் இதற்கு பதிலாக, ஒரு மாணவனிடம் தோற்றார், தான் உருவாக்கிய இந்திரா காந்தியால் ஒதுக்கப்பட்டார், செல்வாக்கும் குறைந்தது, ஜனதா தளம் ஆரம்பித்து அதிலும் தோல்வி என கடைசி காலத்தில் பல்வேறு இன்னல்களை அனுபவத்து தான் பெருந்தலைவர் செய்த தவறுக்கு அவருக்கு கிடைத்த பரிசு. காங்கிரசும் அதன் பெருமையும் குலைந்து போய் இன்று வரை எழமுடியாமல் தவிக்கிறது. அதை பயன்படுத்தி அண்ணா அவர்களும் பசும்பொன் நினைவிடம் சென்று "சிங்கம் போல் இருந்த தேவரை இன்று சவமாக கொடுத்திருக்கிறது இந்த காங்கிரஸ், அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்' என்று வீரத்தமிழ் பேசி தி.மு.வையும், பிறகு அ.தி.மு.கவையும் தென்னகத்தில் வளர்வதற்கு வழிவகை செய்தார்.

பாரத் திருநாட்டில், உலக வரலாற்றில் ஒரு தலைவருக்கு இவ்வளவு மக்கள் கூடுவது தேவர் திருமகனாருக்கு மட்டும் தான். அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் அவர்களுக்கும் கூடுமாம். ஆனால் இவ்வளவு பேர் கிடையாது. இத ஒரு கின்னஸ் சாதனையாக மாற்றும் செயல்களும் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் இந்த நகைச்சுவை பித்தர்களை எண்ணி நகைக்காமல் இருக்க முடியவில்லை.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் - தமிழ் மறை.

வாழ்க தமிழ்!!!
வளர்க நன்மக்கள் புகழ்!!!
வெல்க மனிதம் என்றும்!!!

தலித் மக்களுக்காக தேவர்



சூரியனையும், சந்திரனையும், மி்ன்மி்னிப்பூச்சிகளைப்
பாவித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது பாரதி, வ.உ.சி., தேவர், அம்பேத்கார் போன்ற தேசியத்தலைவர்களை சாதியத் தலைவர்களாகச் சொல்வது...

தலித் மக்களுக்கான ஆலயப் பிரவேசம் நடத்த ராஜாஜி மந்திரிசபை சுதந்திரப் போராட்டவீரர் வைத்திய நாதய்யர் வழியாக முயன்றபோது, வெளியில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. செய்வதறியாது திகைத்துப் போயிருந்த அய்யரவர்களுக்கு "தேவரை அணுகுங்கள்" என்கிற ஆலோசனை ராஜாஜியிடமி்ருந்து கிடைத்தது. அப்பொழுது தேவரவர்களுக்கும் ராஜஜிக்கும் அரசியல் ரீதியாக முரண்பட்டு இருந்தாலும், இக்காரியத்தில் தேரரவர்கள் உதவ முன் வந்தார். "உங்களின் எதிர்ப்பைக் கைவிடாமல் மேலும் கெடுதல் செய்தால் நானே பல்லாயிரக்கணக்கான ஹரிசனங்களையும் மற்றுமுள்ளவர்களையும் படையாகத் திரட்டி தமி்ழகம் முழுக்க ஆலயப் பிரவேசம் செய்வேன்" - என்று சானாதனிகளைப் பார்த்து தேவரவர்கள் கடுமையாக எச்சரித்ததும் சானாதனிகள் பணிந்தனர்.

இதனைத் தேவரவர்களே தமி்ழக சட்டமன்றத்திலும் தனது சொற்பொழிவில் தெரிவித்திருக்கிறார்

1952 ல் மீண்டும் ராஜாஜி மந்திரிசபை அமைந்தபோது "குலக் கல்வித்திட்டம்" என்ற வர்ணாஸ்ரம அடிப்படையிலான திட்டம் கொண்டுவந்தபோது இதை வன்மையாக எதிர்த்து இவ்வாறு கூறினார்"ராஜாஜி கொண்டு வந்த ஆலயப் பிரவேசத்தை முன்பு ஆதரித்த நாங்கள், குலக்கல்வியை எதிர்க்கிறோம்" என்று தலித்களுக்காகக் குரல் கொடுத்தார்

மேலும் அதே சபையில் பலமுறை பேசும் போதும் குலக் கல்வித்திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். "தகப்பன் தொழிலை மகன் செய்யத்தான் வேண்டும் மென்ர ஒரு சூழ்னிலை ஒரு சமுதாய அமைப்பு கல்வி முறை முன்பு இருந்ததது. அதை நான் மறுக்க வில்லை. ஆனால் இன்றைக்கு எந்த ஜாதியில் பிறந்தவனாக இருந்தாலும் கூட, தன்னுடைய திறமைக்கேற்ப எந்தத்தொழிலையும் செய்யலாமென்ற ஒரு சூழ் நிலை ஏற்பட்டுவிட்டது என்பது கணம் முதலமச்சரப் போன்ற அறிவாளிக்குத் தெரியாமலிருக்க முடியாது"

தலித் மக்களுக்காக 1954 மார்ச் 24 ல் அவர் ஆற்றிய உரை:
"இந்த ஹரிசனம், அதில் முன்னேற்றம் என்று சொல்லப் படுகிற விவகாரம்... இந்திய தேசத்திற்கும், சிறப்பாக இந்து மதத்திற்கும் ஒரு பெரும் களங்கம் என்று சொன்னால் அது மி்கையாகாது - இந்த(சாதி) பழக்கமானது மக்களைச் சின்னாபீன்னப்படுத்திவிட்டது. இது பரிதாப வளர்ச்சி, பிற்போக்கான வளர்ச்சியுங்கூட அதே போல சதோதரர்களாக வாழ்ந்த சமூகத்தால் தொழிலின் காரணமாக வகுப்பப்பட்ட பொழுது தீண்டாமை என்கிற இழிவான நிலைக்கு ஆகிவிட்டார்கள்" - என தீண்டாமைக்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

அது மட்டுமல்ல தலித் மக்களின் வாழ்வு உயரச் செய்ய வேண்டியது என்ன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

"ஹரிசனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பழக்கத்தில் பார்க்கிறோம்... செய்யவேண்டியது என்னவென்று கேட்டால், பெரும்பாலான நிலங்கள் வீணாகக் கிடக்கின்றன. அந்த பெரும்பாலான நிலங்களை தர்காஸ்து கொடுக்கிறபோது பழைய அரசாங்கத்தின் பழக்கப்படியே உயர்ந்தவர்கள், வேண்டியவர்கள் என்பவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறதே தவிர, அந்த ஏழைகளுக்கு ஏன் சலுகை காட்டவில்லை...பெரும்பாலான ஹரிசனங்கள் உழுதுகொண்டே வாழ்வோர்களாக சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கை கட்டி வாழ்கிற இழிவான நிலைமையிலிருந்து மாறி ஹரிசனங்கள் நல்ல விவசாயிகளாவார்கள். அந்த முறையில் ஹரிசனப் பிரச்சினையை 60% செளகரியமாகத் தீர்க்கலாம்"

சித்தாந்தங்களையும் இந்துமதக் கோட்பாடுகளையும் நன்கு உணர்ந்த தேவரவர்கள் எல்லோரையும் சமமாகவே பாவித்தார். சகோதரர்களாகவும், இறைவனின் திருவுருவாகவும் கண்டார். "மனித தெய்வங்களே" என அனைவரையும் அழைப்பார்

"உயர்வு தாழ்வு அற்றது தான் மனித உலகம். உயர்வும் தாழ்வும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை. மனிதன் தன் உடலில் உண்டாக்கிக் கொண்ட உயர்வு தாழ்வில் ஒரு உறுப்பை உயர்வாக எண்ணி, இன்னொரு உறுப்பைத்தாழ்வாக நினைக்கக்கூடாது. கரம் கூப்பி வணங்கும் போது இரு கைகளும் இணைந்துதான் வணங்க வேண்டும்" என்று கூறி உயர்வு தாழ்வு கூடாது, சாதி வேறுபாடுகள் கூடாது என்றார்

நிறம், சாதி பார்த்தா மனிதனை இறைவன் படைத்தான். அனல் நிறம் கொண்ட சிவனையும், அட்டக்கரி நிறம் கொண்ட கண்ணனையும் நாம் நிறம் பார்த்து வணங்குவதில்லை. மனிதர்கள் சாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பதற்கு அரன் மகன் குமரனையும், குறமகள் வள்ளியையும் தம்பதியாக்கிக் காட்டுகிறது நமது புராணம். "சாதி என்பது பச்சை அநாகரிகம் சாதியையும் நிறத்தையும் பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை ஆன்மீகத்துக்குமி்ல்லை" என மனிதனுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் பூஜை" என்று கூறினார்.

தாழ்த்தப் பட்டவர்களும், ஆதி திராவிடர்களும் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமடைய கல்வி மி்க முக்கியம் என உரைத்தார்"ஒரு சாதி ஆதிக்கத்திலுள்ள பள்ளியில் மற்றொரு சாதி மாணவருக்கு இடம் கிடைக்காத நிலையா" என் மனம் நொந்தார்.

சமுதாயத்தில் தாழ்த்தப் பட்ட நிலையில் உள்ளோர் தங்கள் தொழிலை தூக்கி எறிந்து விட்டு வாழ்க்கையின் முன்னேற்றமான தொழிலை செய்து பொருளாதார வசதிகளை பெருக்கி அதன் மூலம் தங்கள் குழந்தைளின் கல்வி வளர்ச்சியில் கவனம் அதிகம் பெற வேண்டும்-என்ற கேட்டுக்கொண்டார்.

பெரும் பணக்காரர்களே நிலங்களை வாங்கி குவித்து கொண்டிருப்பதை அறிந்து ஏழை மக்களும் குறிப்பாக தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசு நிலங்களைப் பகிர்ந்து கொடுங்கள். அவர்களை சொந்த நிலமுள்ள விவசாயிகளாக ஆக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். தாங்களும் மற்றவர்களுக்கு இணையானவர்கள் என்ற நிலை வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

தாழ்த்தப் பட்டவர்களுக்காகக் கட்டப் படும் குடியிருப்புகள் ஊரை விட்டு தொலைவிலில்லாமல் ஊருக்குள்ளேயே கட்டவெண்டுமென்றார். பஸ்ஸிலோ, ரயிலிலோ சம அந்தஸ்த்தோடு பயணம் செய்ய வேண்டும்; மக்களோடு மக்களாக இணைந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

வெறும் பேச்சளவில் போலிவேடமி்ல்லாமல் தமது சொத்துக்களை தனது ' ம ர ண சா ச ன த் தி ல்' கூட ஆதிதிராவிட மக்களுக்காக தனது நிலத்தின் பெரும் பகுதியை எழுதிவைத்துவிட்டு இறந்தார்.

சமபந்தி உணவுமுறையைத் தானே முன்னின்று நடத்திக் காட்டினார்.

தனது கண்காணிப்பிலேயே பல ஆதி திராவிடச் சிறுவர்களை தனது இல்லத்திலேயே வளர்த்து அவர்களை படிக்க வைத்து வாழ்க்கையில் உயர்வடையச் செய்தார்.

நேரிடையாக தேவரிடம் மோதி வெற்றி பெற முடியாத காங்கிரஸ் கட்சித்தலைவர்கள்...மறைமுகமாக தேவரவர்களைப் பலிதீர்த்துக் கொண்டார்கள்.
1957 ல முதுகுளத்தூர் கலவரத்தை வெகு நேர்த்தியாக திட்டமி்ட்டு உயிர் சேதங்களை மட்டுமல்ல இன்றுவரைக்கும் தலித்துகளுக்கும் தேவரினத்துக்கும் குரோதத்தை மூட்டிவிட்டு மன ஊனங்களை ஏற்படுத்திய பெருமை காங்கிரஸாரையே சாரும்.


விரும்பத்தகாத அந்த சம்பவத்தால் மனம் நொந்த தேவரவர்கள் "பரம்பரை பரம்பரையாக அரிசனங்களும், தேவர்களும் தோளோடு தோள் இணைந்தவர்கள். அவர்களைத்தாக்குவதும் துன்புறுத்துவதும் என் ரத்தத்தைச் சிந்தவைப்பதுபோலாகும்" "அரிசன மக்கள் என் சகோதரர்கள் அவர்களைத்தாக்காதீர்கள். அவர்களைத்தாக்க வேண்டுமென்று நினைத்தால் முதலில் என்னைக் கொன்று விட்டு அப்புறம் அவர்களிடம் போங்கள்"என்று 10.09.1957 பொதுக்கூட்டத்தில் உரைத்தார்.

தேவரவர்கள் அனைத்து வகுப்பினருக்கும் பா.பிளாக் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்; தலித் களுக்கும் பொறுப்புக்களையும்,எம்.எல்.ஏ., போன்ற பதவிகளையும் கொடுத்திருந்தார்

"எனக்கு வகுப்புவாதி என்று பெயரிட்டுப் பார்த்தார்கள். நான் எல்லோருக்கும் பொதுவான தேசிய வாதியாக இல்லாமல் வெறும் வகுப்புவாதியாக மட்டும் இருந்திருந்தால் நான் தேர்தலில் ஜெயித்திருக்கவே முடியாது. ஏனெனில் என் தொகுதியில் 18 ஆயிரம்பேர்தான் நான் சார்ந்துள்ள வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் நான் இரண்டு லட்சம் ஓட்டுக்களுக்கும் மேல் ஒவ்வொருதடவையும் வாங்குகிறேன்" வாழ் நாளின் கடைசி பொதுக் கூட்டத்தில் பேசும்போது தேவரவர்கள் ஆற்றிய சோக உரை இது.


தேவரவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டதும் 1962 ல் நடந்த அருப்புக்கோட்டை பாராளுமன்றத்தேர்தலிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தலிலும் அமோக வாக்குளைப் பெற்று வெற்றி பெற்றார். அமோக வாக்குகள் தலித் மக்களேல்லொரும் சேர்ந்தளித்த வாக்கு ....... அவர் மேலிருந்த கலங்கம் துடைக்கப் பட்டது. ஆனால் அவரது உயிரையுமல்லவா எடுத்துக்கொண்டுபோய் விட்டது 55 வயதிலேயே.

ஒரு எம்.பி -ஐ, ஒரு தேசியத்தலைவரை, விடுதலைப் போராட்ட வீரரை, ஆங்கிலத்திலும் தமி்ழிலும் சரளமாகச் சொற்பழிவு நிகழ்த்துகின்ற அபூர்வத் தலைவரை....... குற்றவாளி இல்லையெனச் சொல்ல எடுத்துக்கொண்ட காலங்களில் திட்டமி்ட்டே அவரது உடல் நலத்தைச் சீர்குலைத்து... துன்பத்தைக் கொடுத்து..இறுதியில் மரணத்தையும் கொடுத்தார்கள்


***
இம்மானுவேல் கொலைவழக்கில் அவரது மைத்துனரும், பரமக்குடி தேவேந்திர குல் வேளாளர் பண்பாட்டு மையத்தின் தலைவர் ஜி.பாலச் சந்திரன் கூறுகிறார் "தேவர் சட்ட மன்றத்திலும், தனது சொந்த வீட்டிலும் பள்ளர் இன மக்களை சமமாகப் பாவித்து நானே நேரில் பார்த்துள்ளேன். மறவர், பள்ளர் இடையே நல்லுறவை வளர்த்தவர் தேவர். அவர் இம்மானுவேல் கொலைக்கும் காரணமாக இருந்தார் என்பதில் நம்புவதிற்கில்லை"

***

தமிழச்சி என்று சொல்லிக் கொல்பவருக்கு,

தமிழச்சி என்று சொல்லிக் கொல்பவருக்கு,

FYI wrt --> http://tamizachi.com/index.php/sa/ar/142-2011-07-11-19-22-29.html

///தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த தினமும், நினைவு தினமும் தமிழ்சொற்களால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்க, தேவர் பிறந்த தினமும், நினைவு தினமும் ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத வார்த்தையால் சொல்லப்படுவதன் அரசியல் என்ன? ///

நீ சொல்கிறாயே பெண்ணை பேதையாகப் பார்க்கும் மனோபாவம், அது இல்லாமல் பெண்ணை பராசக்தியாக பார்த்து அவளை வணங்கியவர் தேவர்.
பர்மாவில் பெண் கூந்தலில் நடந்து செல்லும் மரியாதையை (உன் பார்வையில் சொல்ல வேண்டுமானால் மூடநம்பிக்கையை) மறுத்து எங்கள் மண்ணின் நடைமுறை வேறு என்றவர். மூவாசை துறந்தவர், ஆன்மீக மூலம் அனைவரையும் ஒன்றாய் பார்த்த விவேகானந்தரையும் வள்ளலாரையும் பின்பற்றுபவர்.

ஆதலால் இந்த கலி காலத்தில் தனக்கென வாழாது பிறர்க்காக தன் வாழ்வு, வளம், சுகம், துக்கம் அனைத்தையும் துறந்ததால் தேவர் தெய்வமானார்.



///பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதாக வீராப்பு பேசும் கருணாநீதி ´தேவர் ஜெயந்தி´ அன்று குடும்பத்தோடு மாலை போட ஓடுகிறார். ஜெயலலிதா தேவர் சமுகத்தை சேர்ந்த சசிகலாவை இழுத்துக் கொண்டு ஒடுகிறார். வை.கோ தன் பங்குக்கு ஜால்ரா அடிக்கிறார். இவர்களுக்கு தெரியாதா தேவரின் யோக்கியதை? தேவரின் மறுபக்கம் இருண்ட பக்கமல்ல. தேவரின் ஒவ்வொரு வன்முறையும் அப்பட்டமான வெளிச்சத்தில் இருக்கின்றன. இருப்பினும் தேவர் குறித்து தமிழ்சமூகம் கருத்துச் சொல்ல அஞ்சுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் தேவர் சமுகத்திடம் இருப்பதால் குழைந்து கூத்தாடி தேவர் சமுகத்தினரின் காலை நக்கும் அரசியல் செய்கிறார்கள்.///

உனக்கு அரைகுறை அறிவு தான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மையில் ஐயாவின் தொகுதியில் கூட தாழ்த்தப்பட்டவர்கள் வாக்குகள் தான் அதிகம். பின்னால் கொடுத்திருக்கும் கட்டுரையை ஊன்றிப்படி, புரியும்!



///1995,1996-இல் தென்மாவட்டப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ´தலித் தளபதி சுந்தரலிங்க´த்தின் பெயரை வைத்ததற்காக பேருந்துக்களில் ஏறமாட்டோம் என்றும், பள்ளரின் பெயரை நீக்கு என்றும் கலவரங்களில் ஈடுபட்ட போது முக்குலத்து சாதி வெறியர்களுக்கு பயந்து தமிழக அரசு தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரையே தூக்கிவிட்டு முக்குலத்தாருக்கு ஆதரவாக செயல்பட்டதும், ///

அடிப்படை ஞானம் கூட தெரியாத மூடமதி கொண்ட பெண்ணே, இந்த கருணாநிதியின் வஞ்சகம் உனக்கு புரியவில்லை. வரியை பின்பு கட்டிக்கொள்கிறேன் என்றும், தனது கணக்குப் பிள்ளை வீட்டு திருமணத்திற்க்காக வெள்ளையர் தானியக்கிடங்கு (காவலனைக் கொன்றுவிட்டு )
கொள்ளையடிக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கோருவதற்கும் பதினேழு நாட்கள் வெள்ளையனுக்கு பின்னால் அலையோ அலையோவென அலைந்து திரிந்தவனுக்கு சிலைகள், நினைவுச் சின்னங்கள், போக்குவரத்துக்கழகப் பெயர் என்று பலதும் செய்யப்பட்டது. கடைசியில் ஆங்கிலேயருக்கு எதிராக ஓடோடி, திருச்சி அதிகாரியிடம் சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் என்று காட்டில் பதுங்கி ஒரு கொள்ளையனாக கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டவன் கட்டபொம்மன் என்ற நாயக்கன். பெரியார் இனம். வந்தேறிக் கூட்டம்.

ஆனால் அவனது பகுதியில் இருந்த ஒரே காரணத்திற்க்காக அவனுக்காக சமரில் சண்டையிட்டு அழிந்தவர்கள் தளபதி வெள்ளையத் தேவனும், போர்வீரன் சுந்தரலிங்கமும்.


இந்த கொலைஞர் என்ன செய்தார் என்றால் கொள்ளையன் கட்டபொம்முவுக்கும், படைவீரனான சுந்தரலிங்கத்திற்கும் போக்குவரத்து பெயர்கள் வைத்து விட்டு, மண்ணின் மைந்தனான வெள்ளையத்தேவனை மறந்து போனார் கிழட்டு கயவர். எங்கேயிருந்து வந்தவன் வேண்டும், படைவீரன் வேண்டும், படைத்தளபதி மட்டும் வேண்டாமா? ஏன் இந்த ஓரவஞ்சனை? என கருணாநிதியின் கயமைக்கு வேட்டு வைக்கப்பட்ட நிகழ்வுகள் தான் நடந்தவைகள் எல்லாம். நீ மேற்சொன்னவைகள் எல்லாம். உன்னை போல் அரைகுறை அறிவு கொண்டு பிதற்றுபவர்களுக்கு இதெல்லாம் கண்டிப்பாக தெரியாது. புரியவும் புரியாது. உனக்கும் உண்மைக்கும் தான் நெடுந்தூரம் ஆச்சே.


///அதே தமிழக அரசு மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்து இராமலிங்க தேவரின் பெயரை வைத்து விசுவாசத்தை காட்டிக் கொண்டதும், ///


இன்னும் அந்தப் பெயரை விமான நிலையத்திற்கு வைக்கவில்லை பெரியார் கண்ட உண்மை மட்டும் பேசும் தலிலசியே. அதுவாய் வந்த இந்தப் பெயர் கூட உன் பிரதிபலிப்பாய் உண்மையைக் கூறுகிறது. உனது நிகழ்கால ஞானம் பெரியாரைப் போலவே உள்ளது. தெரிந்தால் சொல். இல்லை என்றால் அமைதியாக இரு. மேதாவியை போல புலம்பினால் கெட்டபெயர் தான் ஏற்படும். ஏற்கனவே கெடுத்துக் கொண்ட பெயர் தானே! அதனால் உனக்குப் பிரச்னை இல்லை போலும்.


///தேவர் நூற்றாண்டு விழாவின் போது பசும்பொன் தேவரின் தபால்தலையை வெளியிட்டு தமிழக அரசு தன் ஒருபக்க சாதி ஆதரவை காட்டிக் கொண்டதும், ///

நாட்டுக்காக, மக்களுக்காக சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆன்மிகம் வளர்த்த பெரியவருக்கு வைக்காமல் உனக்கா வெளியிடுவார்கள் தபால் தலை!!! போ போய் புள்ள குட்டிகள் நல்லதா நாலு படிக்க வை. அடுத்த தலைமுறையாவது திருந்தட்டும்.


///அவர் வாழ்ந்த காலங்களில் அவர் மீது எத்தனையெத்தனை கொலை வழக்கு இருந்தன என்பதை கவனிக்க வேண்டும்.///

மறுபடியும் அதே வெட்டிப் பேச்சு. அதை பட்டியலிட்டு சொல்லேன் கேட்போம், படிப்போம்.
ஆங்கிலேயனுக்கு கூஜா தூக்கியவனுக்கா கொலை குற்றம் சுமத்துவார்கள்?
கோழைக்கு எதிரி இருக்கமாட்டான். வீரனுக்கும் சமுதாயத்தின் உண்மை போராளிக்கும் தான் எதிரியாய் இருப்பான்கள் சில கேனைப்பயல்கள்.


///பார்வர்டு பிளாக்´ மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இடதுசாரி கட்சிக்களாக இருக்க தேவர் தமிழகத்தில் ஜாதி கட்சியாக நடத்திக் கொண்டிருந்தார்.///
ஆறுமுகம் என்ற தாழ்த்தப்பட்டவர் பார்வர்ட் பிளாக் சட்டமன்ற உறுப்பினராக தமிழகத்தில் இருந்தது உனக்கு தெரியுமா?
பெருமாள் என்ற தாழ்த்தப்பட்டவர் தான் தமிழக சட்டமன்றத்தில் பசும்பொன் ஐயாவின் திரு உருவப்படத்தை திறந்து வைக்க காரணமானவர் என்பது உனக்கு தெரியுமா?
ஆண்டியப்பக் கவுண்டர் எட்டு ஆண்டுகள் பார்வர்ட் பிளாக் தமிழகத் தலைவராக இருந்தது உனக்கு தெரியுமா?
தன்னை சாயல்குடியில் விவேகானந்தர் பற்றி பேச வாய்த்த செட்டியாரை கமுதியில் நிற்கவைத்து வெற்றிபெற வைத்தவர் என்பது தெரியுமா?
ஐயாவின் வாழ்க்கை வரலாற்றினை எழுதி, கடைசி வரை ஐயாவின் கட்சியில் இருந்தவர் எ.ஆர். பெருமாள் என்ற நாயக்கர் என்பது தெரியுமா?
குமாரசாமி ராசாவுக்கு எதிரான தனது நியமனத்தை, தலைமைக்கு கட்டுப்பட்டு விட்டுக்கொடுத்து அவரை பதிவியில் உட்கார வைத்தது தெரியுமா?
காமராசரை தமிழக காங்கிரஸ் தலைமைக்கு உட்கார வைத்து அழகு பார்த்தவர் பசும்பொன் ஐயா தெரியுமா?
சானார் (நாடார்) இனத்தை சேர்ந்த பலரும் பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்து பணி செய்தது உனக்கு தெரியுமா?
பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்த பலரும் தன்னுயிரை மயிரெனக் கருதி உன்னை போன்ற சாதாரண மக்களுக்காவும், உம் விடுதலைக்காகவும் போராட நேதாஜி படை சென்றது உனக்கு புரியுமா?
நாடர்களின் கொள்ளை வியாபாரத்தை எதிர்த்து பாரதமாதா கூட்டுறவு அங்காடியை திறந்து எல்லோருக்கும் நியாயமான விலை கிடைக்க செய்த கூட்டுறவுத் தலைவர் அவர் என்பது தெரியுமா?(அதை தான் இன்றைய அரசு கூட்டுறவு அங்காடி (ரேஷன் கடை) என்ற திறந்து வைத்திருக்கிறது. அதை அன்றே செய்தவர் பசும்பொன் ஐயா).
தனது சொத்தை இரண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதிந்து கொடுத்த, அவர்கள் தம் உழைப்பை மதிக்கத் தெரிந்த, ஒரு பண்பாளர் பற்றி உனக்கு எப்படி புரியும்?

என்ன தெரியும் உனக்கு? புண்ணாக்கு தான் தெரியும் உனக்கு!


///இச்சம்பவம் தமிழக்ததில் பெரிய கலவரத்தை உருவாக்கிய போதும் பெரியாரின் உதவியோடு துணிந்து நின்று போராடினார் கமாராசர்.///
கிழிச்சார்!! இதைப் படி முதல்ல, அப்புறம் தெரியும் யார் அமைதிக்காக போராடினார்கள் என்று!
http://uravukkalam.blogspot.com/2010/02/3.html


///சொல்லுங்கள் துரோகிகளே!

சொல்லுங்கள் புரட்டு கதை பேசும் புரட்டர்களே!!! ///
இப்பவும் சொல்றேன் உனக்கு உண்மை தெளிதல்கள் மிகக்குறைவு. அமைதியாக இருந்து பலவற்றை நல்லவற்றை தெரிந்து கொண்டு எழுது. உன் உணர்வு எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்க்கு
உள்ளத் தனைய துயர்வு - தமிழ் மறை.

வாழ்க வளமுடன்!!!

பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்

பாலபாடத்தை மனப்பாடம் செய்து படிக்கும் பல பச்சை பிள்ளைகளுக்கு உண்மையாக நடந்த வரலாறு தெரிய வாய்ப்பில்லை. ஆதலால் இங்கே அது…

பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்:

1. மாநில எல்லை சீரமைப்பில் காமராஜ் நாடார் அவர்களின் இனப்பற்று வெளிப்படையாகவே தெரிந்து போனது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து நாகர்கோயில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய வியாபாரி நாடர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளை சென்னை மாகாணத்தோடு இணைப்பதில் காட்டிய அக்கறையினை கேரள இடுக்கி மாவட்டத்திலுள்ள பீர்மேடு, தேவிகுளம், முல்லைப் பெரியாறு, தேக்கடி, குமுளி, மூன்று போன்ற நாடார் இன மக்கள் வசிக்காத மூப்பனார், நாயக்கர், தேவமார், அரிசன், இஸ்லாமியர் வாழும் பகுதிகளை இணைப்பதில் அக்கறை கட்டவில்லை. இன்று வரை இப்பகுதி வாழ் தமிழ் மக்கள் காமராஜ் நாடார் மீது பெரும் மனக்குறையுடன் தான் கேரளா மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அன்றே… இப்பகுதி இணைப்பு குறித்து எதிர்க்கட்சிகளும், எல்லாப் பத்திரிக்கைகளும், எவ்வளவோ எழுதியும் காமராஜ் நாடார் கண்டு கொள்ளதவராகவே இருந்து விட்டார்.

2. 1954-ல் மொழிவாரி மாநிலம் பிரிந்த பிறகு தமிழ்நாடு முதன் மந்திரி பதவி மீது காமராஜ் நாடாருக்கு ஆசை ஏற்பட்டது. அதற்கு மற்றக் கட்சி தலைவர்களிடமும், சுய மரியாதை இயக்கத் தலைவர்களிடமும், ஆதரவு கேட்டுப் பெற்ற காமராஜ் நாடார் பசும்பொன் பெருமகனாரிடம் ஆதரவு கேட்க, ஸ்ரீ வரதராஜுலு நாய்டு வீட்டில் சந்திப்பு நடக்கிறது. அவரிடம் காமராஜ் மாகாண காங்கிரஸ் தலைவர் பதவியோடு இருப்பது நல்லது என்றும் “உங்களைப்பற்றித் தெரியும் (காமராஜ் நாடார் இனப்பற்று மிக்கவர்) இந்தப் பதவிக்கு ஆசைப்படக் கூடாது என்றும் பசும்பொன் பெருமகனார் மறுத்துவிட காமராஜ் நாடாருக்கு தேவர் மீது வெறுப்பு தோன்றுகிறது.

3. இதற்கு முன்னரே பசும்பொன் பெருமகனார் பற்பல கூட்டங்களில் விருதுநகர் வியாபாரிகள் பற்றிப் பேசி வந்தார்.

“நிலத்தில் எடுக்கப்படும் இரும்பு, தங்கம், வெள்ளி, நிலக்கரி, பெட்ரோல் பெருட்கள், புகையிலை, கரும்பு, உலோகம் மற்றும் தாதுப் பொருட்கள் முதலான விலைப் பொருட்களை அரசே எடுத்துக் கொண்டு, அதற்குரிய விலையை நிர்ணயம் செய்கிறது.

ஆனால் தரமாக விளையக்கூடிய பொருட்களை விவசாயிடமிருந்து வாங்கி, அதைத் தரம் பிரித்து வணிகம் செய்து, தரமில்லாத பொருட்களை கலப்படம் செய்து விற்று, அதை உண்ண வைக்கிறார்கள்”.

“வயலில் இடுப்பொடிய விவசாயம் செய்கிறான் நம் விவசாயி. உடப்பில் உப்புப்பரிய பருத்தி எடுக்கிறாள் எம் பெண் மக்கள். ஆனால் அதற்கு விலை வைப்பதோ விருதுநகர் வியாபாரி. இது எந்த வகை நியாயம்! இதையெல்லாம் அரசாங்கம் நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்க செய்ய வேண்டாமா? என்று மேடையில் பேசினார்.

விருதுநகர் வியாபாரிகள் கலப்படம் செய்து, தரமில்லாத பொருட்களை விற்கிறார்கள். வியாபாரம் தர்மத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்கிறார்கள் என்று பல கூடங்களில் பேசி வந்தார்கள்.

அன்றைய சினிமாவிலும், நாடக மேடைகளிலும் கலப்படம் பற்றிய பாட்டுக்கள் பல வந்துள்ளன. உதாரணமாக ஒரு பாட்டு….

“இருந்தா முக்காலணா
இல்லேன்னா காலணா! லேபிள்
இருந்தா முக்காலணா
இல்லேன்னா காலணா!
பழைய புட்டி, பழைய டப்பா….
டப்பா….டப்பா….என்ன டப்பா!

என்ற பாட்டு அப்போது மிகவும் பிரபலம். இது விருதுநகர் நாடார் வியாபாரிகளுக்கேன்றே எழுதப்பட்டது போலிருக்கும்.

அப்போது கார்லிக்ஸ் டப்பா டின், பால்பவுடர் டப்பா, முகப்பவுடர் டப்பா, காப்பித்தூள் டாப்பா, டின்கள் இவைகளின் லேபிள் கிழியாமல் இருந்து கொடுக்கப்படும் டப்பா, மற்றும் டின்களுக்கு கூடிதல் காசும், லேபிள் இல்லாமலும், கிழிந்தும் இருக்கும் டப்பா மற்றும் டின்களுக்கு குறைந்த காசும் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள், கூடை வியாபாரிகளான நாடார் வியாபாரிகள். இவைகள் அன்று கலப்படம் செய்து விர்ப்பதர்க்கு பயன்பட்டன.

இப்படியெல்லாம் பசும்பொன் பெருமகனார் பேசியதனால் தூத்துக்குடி நாடார் வியாபாரி ஒருவர் கோபம் கொண்டு “இவரை வெட்டிப் போட்டுவிட்டு ஜெயிலுக்கு போனால் தப்பில்லை” என்று பேசியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பெருமகனாரும்….

“என் ஒருவனைக் கொள்வதனால்; அவர்களுக்கு திருப்தி எனில், என்னை கொன்று விட்டுப் போகட்டும். நான் இறந்தாலும்; என் போன்ற ஆயிரமாயிரம் முத்துராமலிங்கத்தைப் பெற்றெடுக்கும் சக்தியுள்ளவள் என் பாரத மாதா!” என்று பேசினார்.

4. பசும்பொன் பெருமகனார், காமராஜ் நாடார் கள்ள நோட்டு அடிப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என்று பல மேடைகளில் பேசினார். இது பற்றி திரு.கே.ஆர்.நல்லசிவம், எம்.எல்.ஏ. அவர்கள் 1957 அக்டோபர் மாதம் 29ந் தேதி சென்னை மாகாண சட்டசபை கூட்டத் தொடரில் ஒரு கேள்வி எழுப்பிகிறார்.

“ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் திரு. காமாராஜ் நாடார் அவர்கள் கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகிப்பதற்கு உடந்தையாக உள்ளார்கள் எனக் குறிப்பிட்டதாகச் செய்தி வந்தது. நாட்டிலும் இது பற்றி அநேகப் பேச்சுக்கள்!

குறிப்பாக….
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் வந்திருக்கிறது. விலைவாசிகள் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. சர்க்கார் ஒரு பங்கு அதாவது 500 கோடி ரூபாய்க்கு நூறுகள் வெளியிட்டார்கள் என்றால்…. அதைபோல் வெளியில் இருப்பவர்கள் இன்னொரு மடங்கு 500 கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சிட்டார்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்” என்று பேசுகிறார்.

அதற்கு காமராஜ் நாடரின் பதில்…

திரு. காமராஜ் (தமிழக முதல்வர்): நான் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகிக்கிறேன் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா! அச்சிட்டு விநியோகிக்க நான் உடந்தையாக இருக்கிறேன் என்பது போலவே பேச்சு இருக்கிறது. அதை நீங்கள் நம்புகிறீர்களா?

திரு.கே.ஆர்.நல்லசிவம், (எம்.எல்.ஏ): உண்மையிலேயே அவர் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்று தான் கேள்விப்பட்டேன். செல்வாக்குள்ள பத்திரிக்கைகளில், பத்தாயிரம், இருபதாயிரம் பிரசுரமாகிற பத்திரிக்கைகளில் இதைப் பற்றி எழுதியிருந்தார்கள். ஆகவே இது பொய் என்பதை நிரூபிப்பதற்காகவாவது ஏன் அப்போதே முதல் மந்திரி அவர்கள் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு தொடரவில்லை என்று தான் கேட்கிறேன்.

உண்மையில் அந்தக் குற்றச்சாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றால் நாட்டுமக்கள் உண்மையை அறிந்து கொள்ள, அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்திய ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு நடத்தியிருக்கவேண்டும். அவர் என்ன சாதாரணமானவரா? ஒரு பொறுப்புள்ள அங்கத்தினர். பாராளுமன்ற உறுப்பினர்.

இந்தக் கேள்விகளுக்கு காமராஜ் நாடார் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.
(“சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு” பக்கம் 85-86 )

5. பசும்பொன் பெருமகனார், சென்னை திருவல்லிக்கேணி கூட்டத்தில் காமராஜ் நாடார் கள்ள நோட்டு அடிக்கத் துணை போகிறார் என்று பேசியதைக் கேட்ட ஐ.ஜியின் நடவடிக்கையால் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் விருதுநகர் நாடார் வியாபாரி நாராயணசாமி கைது செய்யப்படுகிறார். ஆனால் அவரை காமராஜ் நாடார் சிபார்சு செய்து, வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க இயலாதவாறு செய்து விடுவிக்கப்படுகிறார்.

அந்த விருதுநகர் வியாபாரி மீது நடவடிக்க எடுக்கப்பட்டதா என்று சட்டசபையில் கேள்வி கேட்டபோது திரு. காமராஜ் நாடாருக்குப் பதிலாக திரு.கே.சி.சுப்பிரமணியம் பதில் கூறுகிறார்.

“இந்த கேஸை மேற்கொண்டு நடத்த முடியவில்லை!” என்று கூறுகிறார். ஏனெனில் காமராஜ் நாடார் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கும். அதனால் மூடி மறைத்துவிட்டார்கள்.
(“தேவரின் மேடை பேச்சு” பக்கம் 64 )

6. அப்போது காமராஜ் நாடாரின் மந்திரி சபையில் மந்திர்கள் லஞ்சம் வாங்கியது சம்பந்தமாக பசும்பொன் பெருமகனார் குற்றம் சாட்டிப் பேசினார். காமராஜ் நாடாரின் சக மந்திரி ஒருவர் லஞ்சமாக பணம் பெற்றுக் கொள்ளாமல், ஒருவரிடம் “ப்ளாங்க் செக்’ வாங்கிய விவகாரம் அப்போது பிரபலமாகப் பேசப் பட்டது. அம்மாதிரி பெயர் பி.பரமேஸ்வரன். அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் கொடுக்கப் படவில்லை.

7. 1955-ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வில் (Tண்Pஸ்C) சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு செய்ததில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாடார் இன மக்களாகவே காமராஜ் நாடரின் சிபாரிச்களால் தேர்வு செய்யப்பட்டார்கள். கள்ள நோட்டு அச்சிட்டதாக அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான தேனி தியாகராஜன் அவர்கள் மீது வதந்திகளும், கோயம்புத்தூர் கிருஷ்ணன் (மில் அதிபர்) மீது நூறு ரூபாய் கள்ள நோட்டு வழக்கும், நடந்த செய்தி தமிழகம் மற்றும் இந்தியாவையே உலுக்கியது.

8. உண்மையான காங்கிரஸ்காரர்களும், காமராஜ் நாடாரால் மனம் நொந்து போன தேசியவாதிகளும் சேர்ந்து, பசும்பொன் பெருமகனார் தலைமையில் சீர்திருத்தக் காங்கிரஸ் போன்ற கட்சியை தோற்றுவித்து, 1957 தேர்தலில் 80 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றிகளினால் அதிர்ச்சியடைந்த காமராஜ் நாடாருக்கு, அடுத்த தேர்தலில் சீர்திருத்த காங்கிரஸ் ஜெயித்து வந்து ஆட்சியைப் பிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தோன்றத் தொடங்கியது. இதனால் காமராஜ் நாடார் பசும்பொன் பெருமகனாரின் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று துடிக்கிறார்.

9. 1955-ல் பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் சீலபத்ரயாஜி மூலம் காங்கிரஸ் கட்சியில் பார்வர்டு பிளாக் கட்சியை இணைக்க நடந்த முயற்சியை பசும்பொன் பெருமகனார் தடுத்து விட்டதோடு, நேரு நடத்திய இணைப்பு நாடகத்தை போலி என்று மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கியது நேருவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

10. இரண்டாம் முறை பர்மா சென்று வந்த பசும்பொன் பெருமகனார் “நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை பார்த்து விட்டு தான் வருகிறேன். இப்போது அவர் யுத்த முனையில் இருக்கிறார்” என்று கல்கத்தாவில் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தில் பேசியது; நேதாஜி இறந்து விட்டார் என்று நம்ப வைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்த நேருவுக்கு மிகுந்த கோபத்தோடு தலைவலியைக் கொடுத்தது.

“உண்மையான சுதந்திரம் 1937லிலேயே வந்திருக்க வேண்டும். பத்து வருட கால தாமததிருக்கு காரணமே, அப்போதுள்ள காங்கிரஸ்காரர்கள் தான்” என்றும்

மேலும் “நாம் அடைந்துள்ள இந்த சுதந்திரமானது முழுச் சுதந்திரமல்ல. மூளிச் சுதந்திரம். மவுண்ட் பேட்டனின் பிரித்தாளும் தந்திர முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரதத் தாய் கைகளுக்கு இரட்டை விலங்கு போடப்பட்ட நாள் தான் ஆகஸ்ட் 15ம் நாள். மேலும் மூன்றாவது உலகப் போர் தொடங்கும் காலத்தில் நேதாஜி சுபாஸ் பாபு தக்க நேரத்தில் தனது சேனையோடு பாரதத்திற்குள் பிரவேசிப்பார். அக்காலத்தில் நமக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கச் செய்வார்” என்று பசும்பொன் பெருமகனாரது ஆணித்தரமான பேச்சும்,

“இந்தியாவின் வீரமகனான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தலையை அடமானமாக வைத்துதான் பிரிட்டிசாரிடம் சுதந்திரம் பெற்றது காங்கிரஸ். இது கேவலமான சுதந்திரம்” என்றும் பேசியது நேருவுக்கு எரிச்சலை ஊட்டியது.

1937லிருந்து தொடர்ந்து எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் இருப்பவரை எப்படியாவது பாராளுமன்றத்திற்கு வரவிடாமல் செய்து விடுங்கள் என்று காமராஜ் நாடாருக்கு நேரு கட்டளை இடுகிறார்.

மேலே நேருவுக்கு நேதாஜி சம்பந்தமாக பசும்பொன் பெருமகனரால் பெரும் தலைவலி, நெருக்கடி, கீழே தமிழ்நாட்டில் காமாராஜ் நாடாருக்கு தன் இனமக்கள் பிரச்சனைகளைப் பேசியதால் இடைஞ்சல் ஆகியவை தனி மனிதரான பசும்பொன் பெருமகனாரை நேரிடையாக சந்திக்க முடியாமல்…

இரண்டு அரசுகளின் மூலம் ஒரு சதித் திட்டம் தீட்டப்படுகிறது. அதுதான் இராமநாதபுரம் ஜாதிக் கலவரம். அதற்கு பகடைக் காயாகப் பயன்படுத்தப் பட்டு பலிகடாவாக ஆக்கப்பட்டவர்தான் காங்கிரசின் பிரதிநிதியான திரு. இம்மானுவேல் அவர்கள்.

அப்போதைய முதல் மந்திரியான காமராஜ் நாடாரின் ஆலோசனையின் பேரில், அரிசன நலத்துறை மந்திரியான கக்கன் அவர்களும் இம்மானுவேலுக்கு கட்சியில் பல பதவி தருவதாகக் கூறினார். அரிசனங்களின் ரிசர்வ் தொகுதிகளில் தேர்தலுக்கு நிற்பதர்க்கான தகுதி இந்து-அரிசனுக்குத் தான் உண்டு. ஆகவே கிறிஸ்தவரான இம்மனுவேலுவை இந்து மதத்திற்கு மாற்றி இம்மானுவேல் சேகரன் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். ஆனால் கக்கன் அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும், காமராஜ் நாடார் எந்த பதவியும் அவருக்குத் தராமல் காலதாமதம் செய்தார். இதை அப்போதைய அரிசன மக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருந்தனர்.

மேற்கூறியவைகள் எல்லாம் காமராஜ் நாடார் படிக்காதவராக இருந்தாலும், தனது இன மக்களுக்கு அனுசரணையாகவும், கூடுதல் பற்றுதலுடனும் இருந்தார் என்பதற்கு சான்றாகவும், பசும்பொன் பெருமகனாருக்கு எதிராக செயல்பட தூண்டிய காரணிகள் என்பதுவும் வெள்ளிடைமலை.