Friday 19 August 2011

தமிழச்சி என்று சொல்லிக் கொல்பவருக்கு,

தமிழச்சி என்று சொல்லிக் கொல்பவருக்கு,

FYI wrt --> http://tamizachi.com/index.php/sa/ar/142-2011-07-11-19-22-29.html

///தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த தினமும், நினைவு தினமும் தமிழ்சொற்களால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்க, தேவர் பிறந்த தினமும், நினைவு தினமும் ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத வார்த்தையால் சொல்லப்படுவதன் அரசியல் என்ன? ///

நீ சொல்கிறாயே பெண்ணை பேதையாகப் பார்க்கும் மனோபாவம், அது இல்லாமல் பெண்ணை பராசக்தியாக பார்த்து அவளை வணங்கியவர் தேவர்.
பர்மாவில் பெண் கூந்தலில் நடந்து செல்லும் மரியாதையை (உன் பார்வையில் சொல்ல வேண்டுமானால் மூடநம்பிக்கையை) மறுத்து எங்கள் மண்ணின் நடைமுறை வேறு என்றவர். மூவாசை துறந்தவர், ஆன்மீக மூலம் அனைவரையும் ஒன்றாய் பார்த்த விவேகானந்தரையும் வள்ளலாரையும் பின்பற்றுபவர்.

ஆதலால் இந்த கலி காலத்தில் தனக்கென வாழாது பிறர்க்காக தன் வாழ்வு, வளம், சுகம், துக்கம் அனைத்தையும் துறந்ததால் தேவர் தெய்வமானார்.



///பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதாக வீராப்பு பேசும் கருணாநீதி ´தேவர் ஜெயந்தி´ அன்று குடும்பத்தோடு மாலை போட ஓடுகிறார். ஜெயலலிதா தேவர் சமுகத்தை சேர்ந்த சசிகலாவை இழுத்துக் கொண்டு ஒடுகிறார். வை.கோ தன் பங்குக்கு ஜால்ரா அடிக்கிறார். இவர்களுக்கு தெரியாதா தேவரின் யோக்கியதை? தேவரின் மறுபக்கம் இருண்ட பக்கமல்ல. தேவரின் ஒவ்வொரு வன்முறையும் அப்பட்டமான வெளிச்சத்தில் இருக்கின்றன. இருப்பினும் தேவர் குறித்து தமிழ்சமூகம் கருத்துச் சொல்ல அஞ்சுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் தேவர் சமுகத்திடம் இருப்பதால் குழைந்து கூத்தாடி தேவர் சமுகத்தினரின் காலை நக்கும் அரசியல் செய்கிறார்கள்.///

உனக்கு அரைகுறை அறிவு தான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மையில் ஐயாவின் தொகுதியில் கூட தாழ்த்தப்பட்டவர்கள் வாக்குகள் தான் அதிகம். பின்னால் கொடுத்திருக்கும் கட்டுரையை ஊன்றிப்படி, புரியும்!



///1995,1996-இல் தென்மாவட்டப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ´தலித் தளபதி சுந்தரலிங்க´த்தின் பெயரை வைத்ததற்காக பேருந்துக்களில் ஏறமாட்டோம் என்றும், பள்ளரின் பெயரை நீக்கு என்றும் கலவரங்களில் ஈடுபட்ட போது முக்குலத்து சாதி வெறியர்களுக்கு பயந்து தமிழக அரசு தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரையே தூக்கிவிட்டு முக்குலத்தாருக்கு ஆதரவாக செயல்பட்டதும், ///

அடிப்படை ஞானம் கூட தெரியாத மூடமதி கொண்ட பெண்ணே, இந்த கருணாநிதியின் வஞ்சகம் உனக்கு புரியவில்லை. வரியை பின்பு கட்டிக்கொள்கிறேன் என்றும், தனது கணக்குப் பிள்ளை வீட்டு திருமணத்திற்க்காக வெள்ளையர் தானியக்கிடங்கு (காவலனைக் கொன்றுவிட்டு )
கொள்ளையடிக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கோருவதற்கும் பதினேழு நாட்கள் வெள்ளையனுக்கு பின்னால் அலையோ அலையோவென அலைந்து திரிந்தவனுக்கு சிலைகள், நினைவுச் சின்னங்கள், போக்குவரத்துக்கழகப் பெயர் என்று பலதும் செய்யப்பட்டது. கடைசியில் ஆங்கிலேயருக்கு எதிராக ஓடோடி, திருச்சி அதிகாரியிடம் சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் என்று காட்டில் பதுங்கி ஒரு கொள்ளையனாக கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டவன் கட்டபொம்மன் என்ற நாயக்கன். பெரியார் இனம். வந்தேறிக் கூட்டம்.

ஆனால் அவனது பகுதியில் இருந்த ஒரே காரணத்திற்க்காக அவனுக்காக சமரில் சண்டையிட்டு அழிந்தவர்கள் தளபதி வெள்ளையத் தேவனும், போர்வீரன் சுந்தரலிங்கமும்.


இந்த கொலைஞர் என்ன செய்தார் என்றால் கொள்ளையன் கட்டபொம்முவுக்கும், படைவீரனான சுந்தரலிங்கத்திற்கும் போக்குவரத்து பெயர்கள் வைத்து விட்டு, மண்ணின் மைந்தனான வெள்ளையத்தேவனை மறந்து போனார் கிழட்டு கயவர். எங்கேயிருந்து வந்தவன் வேண்டும், படைவீரன் வேண்டும், படைத்தளபதி மட்டும் வேண்டாமா? ஏன் இந்த ஓரவஞ்சனை? என கருணாநிதியின் கயமைக்கு வேட்டு வைக்கப்பட்ட நிகழ்வுகள் தான் நடந்தவைகள் எல்லாம். நீ மேற்சொன்னவைகள் எல்லாம். உன்னை போல் அரைகுறை அறிவு கொண்டு பிதற்றுபவர்களுக்கு இதெல்லாம் கண்டிப்பாக தெரியாது. புரியவும் புரியாது. உனக்கும் உண்மைக்கும் தான் நெடுந்தூரம் ஆச்சே.


///அதே தமிழக அரசு மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்து இராமலிங்க தேவரின் பெயரை வைத்து விசுவாசத்தை காட்டிக் கொண்டதும், ///


இன்னும் அந்தப் பெயரை விமான நிலையத்திற்கு வைக்கவில்லை பெரியார் கண்ட உண்மை மட்டும் பேசும் தலிலசியே. அதுவாய் வந்த இந்தப் பெயர் கூட உன் பிரதிபலிப்பாய் உண்மையைக் கூறுகிறது. உனது நிகழ்கால ஞானம் பெரியாரைப் போலவே உள்ளது. தெரிந்தால் சொல். இல்லை என்றால் அமைதியாக இரு. மேதாவியை போல புலம்பினால் கெட்டபெயர் தான் ஏற்படும். ஏற்கனவே கெடுத்துக் கொண்ட பெயர் தானே! அதனால் உனக்குப் பிரச்னை இல்லை போலும்.


///தேவர் நூற்றாண்டு விழாவின் போது பசும்பொன் தேவரின் தபால்தலையை வெளியிட்டு தமிழக அரசு தன் ஒருபக்க சாதி ஆதரவை காட்டிக் கொண்டதும், ///

நாட்டுக்காக, மக்களுக்காக சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆன்மிகம் வளர்த்த பெரியவருக்கு வைக்காமல் உனக்கா வெளியிடுவார்கள் தபால் தலை!!! போ போய் புள்ள குட்டிகள் நல்லதா நாலு படிக்க வை. அடுத்த தலைமுறையாவது திருந்தட்டும்.


///அவர் வாழ்ந்த காலங்களில் அவர் மீது எத்தனையெத்தனை கொலை வழக்கு இருந்தன என்பதை கவனிக்க வேண்டும்.///

மறுபடியும் அதே வெட்டிப் பேச்சு. அதை பட்டியலிட்டு சொல்லேன் கேட்போம், படிப்போம்.
ஆங்கிலேயனுக்கு கூஜா தூக்கியவனுக்கா கொலை குற்றம் சுமத்துவார்கள்?
கோழைக்கு எதிரி இருக்கமாட்டான். வீரனுக்கும் சமுதாயத்தின் உண்மை போராளிக்கும் தான் எதிரியாய் இருப்பான்கள் சில கேனைப்பயல்கள்.


///பார்வர்டு பிளாக்´ மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இடதுசாரி கட்சிக்களாக இருக்க தேவர் தமிழகத்தில் ஜாதி கட்சியாக நடத்திக் கொண்டிருந்தார்.///
ஆறுமுகம் என்ற தாழ்த்தப்பட்டவர் பார்வர்ட் பிளாக் சட்டமன்ற உறுப்பினராக தமிழகத்தில் இருந்தது உனக்கு தெரியுமா?
பெருமாள் என்ற தாழ்த்தப்பட்டவர் தான் தமிழக சட்டமன்றத்தில் பசும்பொன் ஐயாவின் திரு உருவப்படத்தை திறந்து வைக்க காரணமானவர் என்பது உனக்கு தெரியுமா?
ஆண்டியப்பக் கவுண்டர் எட்டு ஆண்டுகள் பார்வர்ட் பிளாக் தமிழகத் தலைவராக இருந்தது உனக்கு தெரியுமா?
தன்னை சாயல்குடியில் விவேகானந்தர் பற்றி பேச வாய்த்த செட்டியாரை கமுதியில் நிற்கவைத்து வெற்றிபெற வைத்தவர் என்பது தெரியுமா?
ஐயாவின் வாழ்க்கை வரலாற்றினை எழுதி, கடைசி வரை ஐயாவின் கட்சியில் இருந்தவர் எ.ஆர். பெருமாள் என்ற நாயக்கர் என்பது தெரியுமா?
குமாரசாமி ராசாவுக்கு எதிரான தனது நியமனத்தை, தலைமைக்கு கட்டுப்பட்டு விட்டுக்கொடுத்து அவரை பதிவியில் உட்கார வைத்தது தெரியுமா?
காமராசரை தமிழக காங்கிரஸ் தலைமைக்கு உட்கார வைத்து அழகு பார்த்தவர் பசும்பொன் ஐயா தெரியுமா?
சானார் (நாடார்) இனத்தை சேர்ந்த பலரும் பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்து பணி செய்தது உனக்கு தெரியுமா?
பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்த பலரும் தன்னுயிரை மயிரெனக் கருதி உன்னை போன்ற சாதாரண மக்களுக்காவும், உம் விடுதலைக்காகவும் போராட நேதாஜி படை சென்றது உனக்கு புரியுமா?
நாடர்களின் கொள்ளை வியாபாரத்தை எதிர்த்து பாரதமாதா கூட்டுறவு அங்காடியை திறந்து எல்லோருக்கும் நியாயமான விலை கிடைக்க செய்த கூட்டுறவுத் தலைவர் அவர் என்பது தெரியுமா?(அதை தான் இன்றைய அரசு கூட்டுறவு அங்காடி (ரேஷன் கடை) என்ற திறந்து வைத்திருக்கிறது. அதை அன்றே செய்தவர் பசும்பொன் ஐயா).
தனது சொத்தை இரண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதிந்து கொடுத்த, அவர்கள் தம் உழைப்பை மதிக்கத் தெரிந்த, ஒரு பண்பாளர் பற்றி உனக்கு எப்படி புரியும்?

என்ன தெரியும் உனக்கு? புண்ணாக்கு தான் தெரியும் உனக்கு!


///இச்சம்பவம் தமிழக்ததில் பெரிய கலவரத்தை உருவாக்கிய போதும் பெரியாரின் உதவியோடு துணிந்து நின்று போராடினார் கமாராசர்.///
கிழிச்சார்!! இதைப் படி முதல்ல, அப்புறம் தெரியும் யார் அமைதிக்காக போராடினார்கள் என்று!
http://uravukkalam.blogspot.com/2010/02/3.html


///சொல்லுங்கள் துரோகிகளே!

சொல்லுங்கள் புரட்டு கதை பேசும் புரட்டர்களே!!! ///
இப்பவும் சொல்றேன் உனக்கு உண்மை தெளிதல்கள் மிகக்குறைவு. அமைதியாக இருந்து பலவற்றை நல்லவற்றை தெரிந்து கொண்டு எழுது. உன் உணர்வு எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்க்கு
உள்ளத் தனைய துயர்வு - தமிழ் மறை.

வாழ்க வளமுடன்!!!

2 comments:

  1. amazing pandiyan nice article

    ReplyDelete
  2. ஒரு சிறு திருத்தம்:
    ஐயாவின் வாழ்க்கை வரலாற்றினை ("தேவரின் இதயநாதம்) எழுதி, கடைசி வரை ஐயாவின் கட்சியில் இருந்தவர் திரு. சக்தி மோகன் அவர்கள் என்ற நாயக்கர்.

    ஐயாவின் வாழ்க்கை வரலாற்றினை (முடி சூடா மன்னர் திரு. முத்துராமலிங்க தேவர்) எழுதி, கடைசி வரை ஐயாவின் கட்சியில் இருந்தவர், பார்வர்ட் பிளாக்கின் மாநில தலைவராக மற்றும் தேசியத் தலைவராக இருந்தவர் திரு. எ.ஆர். பெருமாள் அவர்கள் அகமுடையார்.

    ReplyDelete